கடற்படை படகு மோதி இந்திய மீன்பிடிப் படகு மூழ்கியது!

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவரின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய மீனவர்கள் இரண்டு படகுகளில் யாழ்.பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்புக்குள் நுழைந்த சமயம் அதனை இலங்கை கடற்படையினர் விரட்ட முற்பட்டுள்ளனர்.

இதன்போது கடற்படையினரின் படகு மோதியதில் இந்திய மீனவர்களின் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. இவ்வாறு மூழ்கிய படகில் மூன்று இந்திய மீனவர்கள் இருந்தபோதும், இரு இந்திய மீனவர்கள் மட்டுமே கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ராஜ்கிரண் ராசு என்கின்ற இந்திய மீனவர் காணாமற்போயுள்ளார்.

அதிகாலை வரை அவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவர் மீட்கப்படாததால் உயிராபத்து நிகழ்ந்திருக்குமோ என்ற அச்சம் தமிழகத்தில் நிலவுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!