உர பிரச்சினை இன்று நாடாளுமன்றத்தில்

நிதி அமைச்சின் இரு திருத்தச்சட்டமூலங்கள் இன்று நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடவுள்ளது

இந்நிலையில், நிதி அமைச்சின் இரு திருத்தச்சட்டமூலங்கள் மற்றும் ஒரு ஒழுங்குவிதி ஆகியவற்றை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது
நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உர பிரச்சினைகள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.

மேலும் குறித்த பிரேரணை எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படவுள்ளது
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சரினால் முன்வைக்கப்படவுள்ளதுடன் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரையிலும் வரவு செலவு திட்ட விவாதங்கள் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!