சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடையை நீக்க வாய்ப்பில்லை: மத்திய அரசு! October 22, 2021 7:53 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கொரோனா பரவலை தொடர்ந்து சர்வதேச விமான போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரம் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ‘ஏர் பபுள்’ முறையில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சிவில் விமான போக்குவரத்து செயலாளர் ராஜீவ் பன்சால், சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடை விரைவில் நீக்குவதற்கான வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘தற்போதைய ஏர் பபுள் முறையில் போதுமான விமானங்கள் இயக்கப்படுவதால், சர்வதேச விமான பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. விசா கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச வழித்தடங்களில் விமான போக்குவரத்துக்கான கூடுதல் தேவை இல்லை’ என்று தெரிவித்தார். கொரோனாவுக்கு முன்பு இருந்தது போன்ற தேவைகள் ஏற்பட்டால், சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை விலக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…