பெற்றோல், டீசல் விலைகள் அதிகரிப்பு!

எரிபொருள் விலையை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒக்டென் 92 வகை பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 5 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அத்துடன், ஒட்டோ டீசல் வகை டீசல் லீற்றரொன்றின் விலையையும் 5 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    
எனினும், ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் எவ்வித மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!