மடு தேவாலய காணிப் பிரச்சினையில் ஞானசார தேரர் மூக்கை நுழைப்பது ஏன்?

திருக்கேதீஸ்வரத்தில் பாரியளவில் காணியை ஆக்கிரமித்து பௌத்த கோயிலை கட்டிய ஞானசார தேரர் மடு தேவாலய காணிப் பிரச்சனையில் மூக்கை நுழைப்பது ஏன்? என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு திருக்கேதீஸ்வரத்தில் பாரியளவில் காணியை ஆக்கிரமித்து பௌத்த கோவிலை கட்டிய ஞானசார தேரரிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என எதிர்பார்க்க முடியாது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மடு தேவாலயத்துக்கும் அங்குள்ள 27 குடும்பங்களுக்கும் விவசாயக்காணி தொடர்பில் பிரச்சனைகள் உள்ளன. இந்நிலையில் விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் காணி எனவும் மடு தேவாலயத்துக்கு 5 ஏக்கர் காணி எனவும் தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த பிணக்கு காணப்பட்ட போது ஞானசார தேரர் இப்போது வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு வந்த பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தேவையற்ற தலையீடுகளை செய்துள்ளார் என்று செல்வம் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!