நாட்டில் மேலும் 12 கொரோனா மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியதாக, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

இதன்படி, உயிரிழந்தவர்களில் 05 பெண்களும் 07 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 552 பேர் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரை கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஐந்து லட்சத்து 34 ஆயிரத்து தொள்ளாயிரத்து 75 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கொவிட் தொற்றுக்குள்ளானதையடுத்து, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஐந்து லட்சத்து இரண்டாயிரத்து 740 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!