3 மாத இரட்டைக்குழந்தைகளின் பிறப்புறுப்பை அறுத்து கொடூரமாக கொன்ற பெண்!

மூதாட்டி ஒருவர் தனது 3 மாத பேரக்குழந்தைகளின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை வசிப்பவர்கள் பாஸ்கரன் மனைவி ஐஸ்வர்யா. இந்த தம்பதினர்களுக்கு 3 மாதத்திற்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
    
இரட்டை குழந்தை மகிழ்ச்சியில் அந்த தம்பதினர்கள் அந்த ஆண் குழந்தைக்கு ஆரியன் என பெயரிட்டும், பெண் குழந்தைக்கு, ஆரிகா என பெயர் வைத்துள்ளனர்.

இந்த இரட்டை குழந்தைகளை கவனித்துகொள்ள ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தியான குழந்தையின் பாட்டியை அவருடனே தங்கி 2 மாதமாக கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று குழந்தையின் தாயான ஐஸ்வர்யா மருந்துவாங்க சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு வந்த போது, தாய் பாட்டி, குழந்தையை யாரோ தூக்கி சென்றதாக நாடகம் ஆடியுள்ளார்.

பின்னர், அதிர்ச்சியடைந்து வீடு முழுவதும் தேடிய போது, ஆண் குழந்தையான ஆரியன் படுக்கையில் ரத்த வெள்ளத்துடன் பிறப்புறுப்பு காயத்துடனும், பெண் குழந்தை ஆரிகா கழிப்பறையில் அழுக்கு துணியால் வைத்து மூடப்பட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார்.
உடனே பாட்டி என்ன செய்வது என தெரியாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்து இருக்கிறார். உடனே சம்பவம் குறித்து கணவருக்கு தகவல் அறிவிக்க, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் குழந்தைகளை தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கா அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் தப்பியோடிய பாட்டியையும் தேடி வருகின்றனர்.
மேலும் பாட்டி ஏன் இப்படி செய்தார் என விசாரிக்கையில், அவர் 15 வருடமாக மனரீதியான் பாதிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!