பற்றி எரிந்த குடியிருப்பு: 19-வது மாடியில் உயிர் பிழைக்க முயன்ற நபர் கீழே விழுந்து உயிரிழப்பு! October 23, 2021 7:22 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மும்பையில் அவிக்னா அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 19-வது மாடியில் தப்பிக்க முயன்ற ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். மும்பை கரே ரோட்டின் லோயர் பரேல் பகுதியில் உள்ள அவிக்னானா பார்க் குடியிருப்பின் 60 மாடி கட்டிடத்தில் உள்ள 19 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்து பிற்பகல் 12 மணி அளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இது ஒரு குடியிருப்பு கட்டிடம் என்பதால் பலர் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்று வருகின்ற நிலையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் 19-வது மாடியில் ஒருவர் ஜன்னல் வழியாக குத்தித்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து இறந்துள்ளார். இச்சம்பவம் பெரிதும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.தற்போது அந்த நபர் கீழே விழும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…