பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி!

பல்கலைக்கழகங்களை கட்டம் கட்டமாக மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, பரீட்சைகள் மற்றும் செயன்முறை பயிற்சி நடவடிக்கைகளின் அடிப்படையில் முன்னுரிமை  வழங்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது குறித்து இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!