பதவிகளை உதறி விட்டு வெளியேறத் தயார்! October 27, 2021 7:36 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு கட்சி முடிவெடுத்தால் பதவிகளை துறந்துவிட்டு நாளையே வெளியேறுவதற்குத் தயாராக இருப்பதாக கட்சியின் உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரியவித்தார்.உரப்பிரச்சினை மற்றும் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் ஆகியன தொடர்பாக தாம் விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும்படி ஒருசில தரப்பினர் வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.கட்சி ஒருமனதாக தீர்மானித்தால் நாளையே பதவிகளை துறந்துவிட்டு வெளியேறுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்த மஹிந்த அமரவீர, எனினும் அத்தகையதொரு முடிவை கட்சி இன்னும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் கைப்பாவையாக இருக்கும் சஜித் பிரேமதசாவை ஜனாதிபதி ஆக்க முடியுமா அல்லது தோல்வியடைந்த தலைவரான ரணிலை மீண்டும் பலப்படுத்துவதா என்ற பிரச்சினை காணப்படுவதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…