குழந்தைகள் ஜாக்கிரதை: பிரான்சில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! October 29, 2021 7:50 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பிரான்சில் ப்ரோன்சிலைட் எனப்படும் அழற்ச்சி நோய் குழந்தைகளை தாக்கி வருவதால், மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா பரவல் தற்போது கொஞ்சம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தற்போது இங்கு BRONCHIOLITE எனப்படும் மூச்சுக் குழாய் அழற்சி நோய், கைகுழந்தைகளைகளை தாக்க துவங்கியுள்ளது.இது ஒரு ஆபத்தான மற்றும் உயிர்கொல்லி நோய் என்று பிரான்சின் குழந்தைகள் நல சபை எச்சரித்துள்ளது. இந்த அழற்சி நோய் ஏற்கனவே பிரான்சில் பரவியிருந்த நிலையில், தற்போது இது மீண்டும் மிக வேகமாக பரவத் துவங்கியுள்ளதாக பிரான்சின் குழந்தைகள் நல மருத்துவச் சபையின் தலைவர் Christèle Gras-Le Guen கூறியுள்ளார்.இந்த நோய் தற்போது பிரான்சில் உள்ள 13 மாகாணங்களில் 11-க்கு பரவியுள்ளது. மீதமுள்ள ரெத்தோன் மற்றும் கோர்ஸ் மாகாணங்களிலும் இது பரவ ஆரம்பித்துள்ளது.இதனால் குறிப்பாக இரண்டு மாதத்திற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் வெளியில் கொண்டு செல்லாமலும், பலர் முன்னிலையில் வைத்திருப்பதை தவிர்க்கும் படி எச்சரிக்கப்படுகிறது.இந்த குளிர்காலத்தில் பெற்றோர்களுக்கு தடிமன் காய்ச்சல் வந்தால் கூட, அவர்கள் வீட்டில் முகக்கவசம் அணிந்து கொண்டும், கைகளை சுத்தம் செய்து கொண்டும், அதன் பின் குழந்தைகளை தொடுவதும் நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…