சீரற்ற காலநிலை – நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்தார்.

இதேவேளை பதுளை ஓயாவின் நீரோட்டம் அதிகரித்துள்ளமையை அடுத்து நீரில் மூழ்கி நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி மேலும் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!