யாழ்ப்பானம் – கொழும்பு வரையான இரயில் சேவை இன்று முதல் முன்னெடுப்பு

யாழ்ப்பானம் முதல் கொழும்பு கோட்டை வரையான இரயில் சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று பிற்பகல் 5.45 அளவில் கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறைக்கான முதலாவது ரயில் புறப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு வரையில் ஒரு ரயில் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த இரயில் சேவை சாதாரண சேவையாக மாத்திரம் இயக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆசணங்கள் முன்பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் இதன்போது வழங்கப்படமாட்டாது எனவும் யாழ்ப்பாணம் ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!