கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை!

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாநிலத்தின் 13 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, தஞ்சை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, நாமக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!