
அதன்படி, காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் விடுப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரை அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு அளிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!