300 சடலங்களை புதைக்கவே இடம் உள்ளது! November 5, 2021 2:31 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest கொரோனா தொற்றால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி, மஜ்மா நகர் மையவாடி காணி முடிவுறும் தருவாயில் உள்ளதால், இனி அங்கு 250 – 300 வரையான உடல்கள் மாத்திரமே நல்லடக்கம் செய்ய முடியும் என்று ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.மஜ்மா நகர் மையவாடியில் இதுவரை 3,183 சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இன, மத வேறுபாடுகளின்றி அனைத்து இன மக்களின் உடல்களையும் எமது பிரதேச சபை ஊழியர்கள் மிகவும் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வருகின்றனர் என்றும் தவிசாளர் தெரிவித்தார்.அதேவேளை, குறித்த மையவாடியில் நீதிமன்ற அனுமதியின் பிரகாரம், கொரோனா தொற்று அல்லாத 106 அநாதரவான உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…