சதொசவில் பொருட் கொள்வனவுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கம் -வர்த்தக அமைச்சர் அறிவிப்பு

இன்று முதல் சதொசவில் கொள்வனவு செய்யப்படும் சீனி மற்றும் அரிசிக்கு மேலதிகமாக பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே, சதொசவில் கொள்வனவு செய்யப்படும் சீனி மற்றும் அரிசிக்கு மேலதிகமாக 5 பொருட்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!