தமிழகத்தில் ஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு இடியுடன் கனமழை பெய்ய இன்று(நவ.,06) வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி(5.8 கி.மீ., உயரம் வரை) காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!