தலதா மாளிகைக்கு மேலாக பறந்த ட்ரோன்! – பங்களாதேஷ் நாட்டவர் கைது.

கண்டி தலதா மாளிகைக்கு சொந்தமான அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் ட்ரோன் கெமராவை பறக்கவிட்ட பங்களாதேஷ் பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தான் நடத்தும் யூடியூப் சேனலுக்கு உரிய காட்சிகளைப் பெற்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகைக்கு கோவிலுக்கு சொந்தமான அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமெராக்களை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ட்ரோன் கெமரா பொருத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி, கெமரா மற்றும் சந்தேகநபரின் கடவுச்சீட்டு என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!