கனமழை முடிவுக்கு வரும்வரை அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த 2 நாட்களாக கன மழை வெளுத்து வாங்குகிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எச்சரித்துள்ளது சென்னை வானிலை ஆய்வுமையம். மேலும் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகங்களில் 3 வேளியும் இலவச உணவு வழங்க சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல்:

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும் மழைபாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!