கனடாவில் மாயமான இளம்தாயார் மற்றும் குழந்தை: பொதுமக்களின் உதவியை நாடும் போலீசார்! November 13, 2021 9:33 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கனடாவில் 2 வாரங்களாக காணாமல் போன இளம்தாயார் மற்றும் அவர் குழந்தையை பொலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். ரொறன்ரோ பொலிசார் இது தொடர்பிலான முக்கிய அறிக்கையையும், தாய் மற்றும் குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.அதன்படி கேண்டேஸ் பெடிவ் என்ற 29 வயதான இளம்பெண்ணும் அவரின் 2 வயது மகனான லீவியும் கடந்த 30ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கடைசியாக கென்னடி சாலையில் காணப்பட்டனர்.இதன்பின்னர் இருவரும் காணாமல் போயுள்ளனர். இதில் கேண்டேஸ் ஒல்லியான உடல்வாகு கொண்டவர் எனவும் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.சிறுவன் லீவி பழுப்பு நிற சுருள் தலைமுடியுடன் காணப்படுவான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளதோடு மிகுந்த அக்கறையும் கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.அவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனே தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கூறியுள்ளனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…