சுமந்திரன் தலைமையிலான குழுவினருடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினருடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் டுவீட்டர் பதிவொன்றை இட்டுள்ளது.
    
அந்த பதிவில் , “முழுமையான நிலைமாற்று நீதி நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தப்பட்டது. இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு சிறுபான்மை குழுக்களின் ஆலோசனைகள் மற்றும் கரிசனையை கேட்பது அவசியம்.” என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!