நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரல்

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.
இதன்படி, வட மாகாணத்தின் சில பகுதிகளில் இவ்வாறு மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு, வட மத்திய, வட மேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது

ஊவா மற்றும் வட மேல் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாவகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இடியுடன் கூடிய மழைய பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!