பாடசாலைகளில் கொரோனா கொத்தணி உருவாவது குறைவு! November 19, 2021 9:06 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஒரு பிள்ளையிடமிருந்து மற்றொரு பிள்ளைக்குக் கொரோனா வைரஸ் பரவுவது மிகக் குறைவு என விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். பிள்ளைகளுக்கு எந்நேரத்திலும் கொரோனா வைரஸ் பரவலாம். பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவர்கள் இனங்காணப்படலாம் எனவும் தெரிவித்தார்.பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவரிடமிருந்து மற்றொரு மாணவருக்கு கொரோனா வைரஸ் பரவுவதோ அல்லது பாடசாலைகளில் கொரோனா வைரஸ் கொத்தணிகள் உருவாவதோ மிகக் குறைவு எனவும் தெரிவித்தார்.பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும்போது, அந்த வைரஸானது மற்றொரு பிள்ளைக்குப் பரவுவது மிகவும் குறைவான ஒன்று என, உலகில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல உலக சுகாதார ஸ்தாபனமும் பிள்ளைகளிடமிருந்து மற்றொரு பிள்ளைக்குக் கொரோனா வைரஸ் பரவுவது மிகக் குறைவு எனவும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…