இரண்டு மசகு எண்ணெய்க் கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டுக்கு -எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு

மசகு எண்ணெய் ஏற்றிய 2 கப்பல்கள் எதிர்வரும் மாதம் மாதம் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி முதலாவது கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளததக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டாவது கப்பல் டிசம்பர் மாதம் இறுதியில் நாட்டை வந்தடையும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மசகு எண்ணெய் ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!