வவுனியாவில் குடிப்பரம்பலை மாற்ற முயற்சி! November 24, 2021 10:07 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால், வடமத்திய மாகாணத்தின் கெப்பிட்டிகொல்லாவயின் 600 குடும்பங்களையும் பதவிய பகுதியின் 430 குடும்பங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளா் பிரிவுடன் இணைக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். இது முற்றிலும் வவுனியா வடக்கின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடு என்று அவர் குறிப்பிட்டார்.இது குறித்து அரசாங்கத்துடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் கோரிய போதும் இதுவரை சந்திப்புக்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.இது வடக்கை பொறுத்தவரை உணர்ச்சிவயப்படும் பிரச்சனை என்றும் அவர் தெரிவித்தார்.இதேவேளை உலகில் பொலிஸ் சித்திரவதைகளுக்கு எதிரான முறைப்பாடுகளில் இரண்டாவது இடத்தில் இலங்கை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.இது பெருமைப்படக் கூடிய விடயம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.எனவே இந்த விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு, சுயாதீனமாக இயங்கவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…