தடுப்பூசிகளை வணிக நோக்கத்துடன் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி! November 26, 2021 8:00 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இந்தியாவில், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. புனேவில் உள்ள சீரம் நிறுவனம், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. சீரம் நிறுவனம் தன்னிடம் 24 கோடியே 89 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும், நாள்தோறும் கையிருப்பு அதிகரித்து வருவதாகவும் சமீபத்தில் மத்திய அரசிடம் தெரிவித்தது.அதுபோல், கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பும் அதிகமாக உள்ளது. எனவே, கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை வணிக நோக்கத்துடன் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதவிர, ஐ.நா. ஆதரவுடன் நடக்கும் ‘கோவாக்ஸ்’ என்ற சர்வதேச தடுப்பூசி திட்டத்துக்கும் இந்திய தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…