தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டது போயஸ்கார்டன் வீடு! November 27, 2021 11:33 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest வரும் தை மாதம் போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு செல்ல முயற்சிப்போம் என ஜெ தீபா கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அவரின் ரத்த வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த வீட்டுக்கு செல்வது எப்போது என்பது குறித்து தீபா பேசியுள்ளார். அவர் கூறுகையில், அ.தி.மு.க தரப்பிலிருந்து இனி இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டுக்குச் செல்ல முடியாது. அரசுதான் மேல்முறையீடு செய்ய முடியும். தி.மு.க அரசு மேல்முறையீட்டுக்குச் செல்லாது என எதிர்பார்க்கிறோம்.வேதா நிலையம் இல்லத்தை அ.தி.மு.க-வின் கோயில் எனச் சில அமைச்சர்கள் கூறியுள்ளனர். அவர்களின் உணர்வைப் புண்படுத்த விரும்பவில்லை. மூன்று வாரங்களுக்குள் சாவியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.வருமான வரி உள்ளிட்ட சில வரிகள் செலுத்த வேண்டும். அனைத்து சட்டரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் சில சடங்குகளைச் செய்துவிட்டு தை மாதம் வீட்டுக்குச் செல்ல முயற்சிகளை எடுப்போம் என கூறியுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…