விமான நிலைய கொரோனா பரிசோதனை – சுகாதார பரிசோதகர்கள் அதிருப்தி! November 29, 2021 9:45 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்படும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காணும் பொறிமுறைமை தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், புதிய ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாடு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய கொரோனா அடையாள நடைமுறை சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற ஊழியர்களைக் கொண்டுள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.சுங்க மற்றும் குடிவரவு அதிகாரிகள் மூலம் சுகாதார அமைச்சின் பிரதிநிதிகளை வெளிநாட்டவர்கள் சந்தித்ததாகத் தெரிவித்த அவர், இதனால், சுகாதார அதிகாரிகளைத் தவிர்க்க வெளிநாட்டவர்களுக்கு சுதந்திரம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.மேலும் ஒமிக்ரோன் மாறுபாடானது எந்த நேரத்திலும் நாட்டுக்குள் நுழையலாம் என்றும் அவர் எச்சரித்தார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…