கிழக்கு தொல்பொருள் செயலணியில் பத்திநாதன், அபூபக்கர்! November 30, 2021 9:26 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நில அளவையாளர் ஆரியரத்ன திசாநாயக்க, ஓய்வுபெற்ற மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், விரிவுரையாளா் முபிசால் அபூபக்கா் ஆகியோர் இந்த ஜனாதிபதி செயலணியின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த ஜனாதிபதி செயலணி கடந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. செயலணியின் உறுப்பினர் கட்டமைப்பை விரிவாக்கும் நடவடிக்கைகளுக்கமைய இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, செயலணியின் உறுப்பினராக கடமையாற்றி வரும் நில அளவையாளா் நாயகம் எம்.எஸ்.பீ. தென்னக்கோன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…