இந்திய நிதி அமைச்சருடன் பசில் சந்திப்பு!

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய நிதி அமைச்சர் எஸ்.நிர்மலா சீதாராமனை நேற்று புதுடில்லியில் சந்தித்தார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இலங்கையின் பொருளாதார ஒத்துழைப்புக்கு, இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு, பஷில் ராஜபக்ஸ தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பசில் ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!