வடக்கில் நவம்பரில் தொற்றாளர் அதிகம்!

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து 661 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். எனினும் நவம்பர் மாதத்தில் 3 ஆயிரத்து 49 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் மாத்தில் கோவிட்-19 நோயினால் 71 பேர் உயிரிழந்தனர். எனினும் நவம்பர் மாதத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 பேராகக் குறைவடைந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகwqபடியாக 842 பேர் கோவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடுத்தபடியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 825 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் முறையே 713, 540, 129 பேர் நவம்பர் மாதத்தில் கோவிட்-19 நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!