பாகிஸ்தானில் இலங்கையரை உயிருடன் எரித்து கொன்றுவிட்டு செல்பி எடுத்த நபர்: நெஞ்சை உருக்கும் சம்பவம்!

பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொலை செய்யப்பட்ட போது, அங்கிருந்த நபர் ஒருவர் செல்பி எடுத்த புகைப்படம் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் Sialkot நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்த இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த Priyantha diyawadana என்பவர் அங்கிருக்கும் தொழிற்சாலை ஊழியர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டு, அதன் பின் எரித்து கொடுரமாக கொலை செய்யப்பட்டார்.

இது இலங்கை மக்களிடையே மட்டுமின்றி, உலகில் இருக்கும் பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது ஒரு அவமானகரமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களங்களில் Sialkot சம்பவம் தொடர்பான் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அதில் பாகிஸ்தானியர் என்று நம்பப்படும் ஒருவர் இந்த சம்பவத்தின் போது செல்பி எடுத்துள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள், இஸ்லாமியர் மதம் நமக்கு இதை சொல்லிக் கொடுக்கவில்லை, இன்று நம் ஒரு நாடாக தோற்றுவிட்டோம், இஸ்லாமியர்களாக தோற்றுவிட்டோம், மனிதர்களாக தோற்றுவிட்டோம், Priyantha diyawadana எங்களை மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!