வவுனியா இளைஞர்கள் மூவர் முல்லைத்தீவு கடலில் மூழ்கினர்!

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற மூவரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன இருவரை தேடும் பணிகள் தொடர்கின்றன.
    
குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்கு சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த யுவதி முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து அவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

தேடுதலின் போது ஒருவருடைய உடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

குறித்த இளைஞர்களில் , சிவலிங்கம் சமிலன் (வயது_26) , தோணிக்கல் பகுதியை சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் (வயது_26) ஆகியோரே கடலில் மாயமாகியுள்ளனர்.

27 அகவையுடைய மனோகரன் தனுசன் என்ற இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரின் உடலங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள்,கடற்றொழிலாளர்கள் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!