கஞ்சா ஏற்றுமதிக்கு ஆதரவான பிரேரணை நிறைவேறியது! December 8, 2021 1:30 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest கஞ்சாவை ஏற்றுமதி செய்வது குறித்த அவை ஒத்தி வைப்பு பிரேரணை நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சாவை ஏற்றுமதிக்காக பயிரிடுவதற்கு தேவையான சட்டங்கள் விரைவில் உருவாக்கப்பட வேண்டுமென இந்த அவை ஒத்தி வைப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்பொழுது ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளவருமான டயனா கமகேஇந்த பிரேரணையை முன்மொழிந்துள்ளார்.ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இந்த பிரேரணை வழிமொழிந்துள்ளார்.உலகின் சில நாடுகளில் கஞ்சா செய்கையின் மூலம் அந்நிய செலாவணி ஈட்டப்படுவதாக டயனா கமகே தெரிவித்துள்ளார். இந்த உத்தேச சட்ட மூலத்திற்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக அவையில் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…