அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் கோட்டாபய அரசாங்கம்

தற்போதைய கோவிட் நிலைமைக்கு முகங்கொடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கான விசேட கூட்டம் இன்று சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளது. அத்துடன் இலங்கை மக்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் இரண்டையும் வழங்குவதனை கட்டாயமாக்குவதற்கான சட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது 11,928 கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் கோவிட் தொற்றாளருடன் நெருங்கி செயற்பட்டவர்களை பரிசோதனை செய்து அதற்கான அறிக்கை எதிர்வரும் 2 நாட்களுக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதார பணியகத்தின் இயக்குனர் வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையின் கீழ் மேற்கொள்ள வேண்டிய மேலதிக திட்டங்களை நடைமுறைப்படுத்த விசேட கூட்டம் இன்று இரவு 7.30க்கு இடம்பெறவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. நாட்டை முழுமையாக மூடாமல் கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் இலங்கை மக்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் இரண்டையும் கட்டாயமாக்குவதற்கான சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கை இதுவரையில் இடம்பெறவுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!