கொரோனா தடுப்பு செயற்பாட்டில் இருந்து இராணுவத் தளபதி விலகல்!

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம், நேற்று முதல் அமுலாகும் வகையில் பசுமை விவசாயத்திற்கான செயற்பாட்டு மத்திய நிலையமாக மாற்றப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
    
ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம், பசுமை விவசாயத்திற்கான மத்திய நிலையமாக மாற்றப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

விவசாய அமைச்சுக்கு இணையாக இந்த மத்திய நிலையத்தை கொண்டு செல்லவுள்ளதாகவும் குறித்த மத்திய நிலையம் கொவிட்-19 பரவலை தடுக்கும் செயற்பாடுகளிலிருந்து வேறாக செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!