ஒமைக்ரான் தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

குஜராத் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதால், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொருளாதார நிலையிலும் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் அதன் உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் கொரோனா தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது.

இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக இருந்தது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதால், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!