அரசைக் கவிழ்க்க சூழ்ச்சி! December 17, 2021 9:54 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது. அதற்காக தவறான தீர்மானங்களுக்கு துணைபோகவும் முடியாது. யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்கும் என முழுமையாக எதிர்பார்க்கிறோம் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.எமது தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரனாக செயற்படுகின்றமை கவலைக்குரியது.கொள்கைக்கு எதிரான தீர்மானங்கள் அரசாங்கம் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியையும்,அரசாங்கத்தின் கொள்கையினையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கு உண்டு.யுகதவனி மின்நிலையம் இயற்கை எரிவாயு விநியோகத்தின் ஊடாக செயற்பட வேண்டும் என்பது அவசியமானதாகும்.இயற்கை எரிவாயு விநியோக நிறுவனத்திற்கும்,மின்சாரத்துறை அமைச்சுக்குமிடையில் சாதாரன ஒப்பந்தம் செய்துக் கொள்வது அவசியமாகும்.அதனை விடுத்து எரிவாயு விநியோகத்தின் உரிமையை பிற நாட்டின் தனியார் நிறுவனத்திற்கு ஏகபோகமாக விட்டுக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.அமெரிக்க நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏகபோக உரிமையை தனதாக்குவதன் ஊடாக எதிர்காலத்தில் தோற்றம் பெறும் சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.அதன் காரணமாகவே அமைச்சரவையின் மூன்று பிரதான உறுப்பினர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறோம்.யுகதனவி விவகாரத்திற்கு சமூகத்தின் மத்தியில் பல எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளன.கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக பல தரப்பினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்துள்ளார்கள்.நீதிமன்றம் சிறந்த தீர்வை பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கத்திற்குள் தோற்றம் பெற்றுள்ள சக்திகளை தோற்கடித்து சிறந்த நிர்வாகத்தை முன்னெத்து செல்வோம்.அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது.அதேபோல் அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்கும் முடியாது.அரசாங்கத்தை பலவீனப்படுத்த திட்டமிட்ட வகையில் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகின்றன என்றார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…