மிக் மோசடி போலவே யுகதனவி மோசடி!

மிக் விமானக் கொள்வனவில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளையே, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திலும் அரசாங்கம் செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
    
“மிக் விமானங்கள் கொள்வனவு தொடர்பில் யுக்ரைனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. எனினும் யுக்ரைனுடன் செய்துகொள்ளப்பட வேண்டிய ஒப்பந்தமான பிரத்தானியாவில் உள்ள வேறொரு நிறுவனத்திடம் செய்துகொள்ளப்பட்டது.

இதனை வௌிப்படுத்தியமைக்காகவே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார். மிக் விமான ஊழலைபோல யுகதனவியையும் செய்யப் பார்க்கிறார்கள். யுகதனவி தொடர்பில் போட்டர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டுமாக இருந்தால், ஏன் மற்றொரு மூன்றாந்தரப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!