வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தயாராகும் லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் December 18, 2021 8:59 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பதவியை இராஜினாமா செய்த பின்னர் அவர் வெளிநாடு செல்வதற்கு தயாராகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய நிலைமையில் தலைவர் தொடர்ந்து ஊடக சந்திப்புகளை புறக்கணித்து வருகின்றார்.இதன் காரணமாக ஆளும் கட்சி தரப்பினரால் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றது.இதேவேளை, பிரச்சினைக்குரிய சந்தர்ப்பங்களில் முகம் கொடுக்க முடியவில்லை என்றால் பதவியை இராஜினாமா செய்யுமாறு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…