நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூவர் மரணம்!

நியூசிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.

    
இந்தநிலையில் நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம் காரணமாக உயிரிழந்ததாக அந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

13 வயது சிறுவன், 26 வயது வாலிபர் மற்றும் 60 வயது முதியவர் என 3 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் உயிரிழந்ததாக வாரியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!