எரிவாயு வெடிப்புகள் – ஜனாதிபதியிடம் நிபுணர் குழு அறிக்கை.

சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்து, இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கடந்த நவம்பர் 30 ஆம் திகதி ஜனாதிபதியினால் 8 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
    
குறித்த நிபுணர் குழுவினால் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவான இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!