உர விநியோகம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல்

விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹந்தானந்த அழுத்கமகே தேசிய உர இறக்குமதி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மகிந்தானந்த அழுதி;கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.

உர இறக்குமதி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வது இதன் பிரதான நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி உர விநியோகங்கள் மேற்கொள்ளப்ப்படுகின்றதா என்பது தொடர்பிலும் விபரங்களை உள்ளடக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!