துன்மோதர ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 யாழ்ப்பாண பெண்கள்! – சிறுமியின் சடலம் மீட்பு.

கொழும்பு – ஹங்வெல்ல,துன்மோதர ஆற்றில் நீராடச் சென்று காணாமல்போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவரில், 14 வயதான சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    
நேற்றுமாலை நீராடிய போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகளும் 29 வயதுடைய பெண் ஒருவரும் காணாமல் போயினர். ஒரு சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில்,

காணாமல்போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தை வந்த குழுவினரே அவிசாவளை நோக்கி பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!