தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? – மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்! December 31, 2021 8:08 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முடிவடைகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதோடு, ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. பல்வேறு கோணங்களில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு அது குறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…