பிறக்கின்ற புதிய ஆண்டு ராஜபக்சக்களுக்கான ஆண்டாக இருக்காது! ராஜித சூளுரை

2022 ஆம் ஆண்டு ராஜபக்சவினரின் ஆண்டு அல்ல எனவும் அது தமது தரப்பினரின் அரசாங்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratane) தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்தும் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ராஜித சேனாரத்ன நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவை வழங்கி, நோயாளிகளுக்கு தேவையான மருந்துங்களை வழங்கி, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம்.

நாட்டுக்கு தேவையான எரிபொருட்கள் உட்பட அத்தியவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கக் கூடிய நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையில் புதிய ஆண்டில் ஆரம்பிப்போம் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!