புதிய சட்டம் வரும் வரை மாகாண சபைத் தேர்தல் இல்லை! January 4, 2022 9:49 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest புதிய சட்டம் அமுலாகும் வரையில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறாது. தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் முறை தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட செயல் குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் தவறான சட்டவரைவொன்றுக்கு கையை உயர்த்தி ஆதரவளித்தன என்றும், மாகாணசபை சட்டத்தை நடை முறைப்படுத்தவேண்டுமெனில் புதிதாக பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்கள் சத்தியப் பிரமாண உறுதியுரை எடுத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர இதனை கூறியிருந்தார்.கோவிட் -19 வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் நாடு பல சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது. தொடர்ச்சியாக பல் வேறு தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருந்தது. இந்த சவால்கள் புதிய ஆண்டி லும் தொடர்கின்றது. எனவே புதிய ஆண்டும் சவால் மிக்க தாக அமையும். நாட்டில் காணப் படும் சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு அனை வரும் ஒன்றிணைந்து செயல்பட வேண் டும். நாட்டுக்காக உரிய கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்று வதற்கு அனைவரும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும் என்றார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…