விலகப் போவதாக கூறும் அமைச்சர்கள் யாரும் பதவி விலகமாட்டார்கள்!

அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் காணப்படும் வரையில் மக்கள் வரிசையில் நிற்க வேண்டி வருமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தெரிவித்தார்.
    
அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவும் வரையில் வரிசைகள் தொடரும். பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் விரைவில் சரி செய்யப்படும். காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு 10 அல்லது 15 நாட்களுக்குள், மண்ணெண்ணைக்கான தட்டுப்பாடு ஒரு மாதத்துக்குள் சரி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் வரிசைகளில் நிற்பதாகவும், நாட்டு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் பதவிகளை விலகப் போவதாகக் கூறும் அமைச்சர்கள் எவரும், பதவிகளில் இருந்து விலகப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!