முட்டாள்தனமான தீர்மானங்களே பிரச்சினைகளுக்குக் காரணம்! January 5, 2022 7:29 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest உரம், சமையல் எரிவாயு பிரச்சினைகள் நாட்டில் உருவாக்கப்பட்டவை. முட்டாள்தனமான தீர்மானங்களே இப்பிரச்சினைகளுக்குக் காரணமாகும். எனவே, அதற்காக, மக்கள் முன்பு மன்னிப்புக்கேட்க வேண்டுமென ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்தார். “ அரசாங்கத்தின் ஊடாக ஒரு சிலருக்காவது நிவாரணங்கள் கிடைக்கின்றன என்பது மகிழ்ச்சியே. எனினும், இதனூடாக நாட்டின் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்றார்.கொரோனா வைரஸால் நாட்டில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்பது உண்மை. ஆனால், சிலரது செயற்பாடுகள் காரணமாகவே நாட்டுக்குள் பிரச்சினைகளை ஏற்பட்டுள்ளன. இதனை மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமென கூறுவதற்கு மனசாட்சி இடங்கொடுக்காது எனவும் தெரிவித்தார்.உரம், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஆகிய பிரச்சினைகள் நாட்டில் உருவாக்கப்பட்டவை. இதுபோன்ற முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்தமைக்காக மக்களின் முன்பு வந்து மன்னிப்புக் கேட்டுப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…